தமிழ்நாடு

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கக்கட்டி பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2022-07-27 03:23 GMT   |   Update On 2022-07-27 03:23 GMT
  • படகில் 470 கிராம் தங்கக்கட்டி மற்றும் வலம்புரி சங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
  • தங்கம் மற்றும் வலம்புரி சங்கை தமிழகத்திற்கு கடத்த முயன்றதாக 3 பேரை கைது செய்தனர்.

ராமேசுவரம்:

இலங்கை மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது படகு ஒன்றை சோதனை செய்தனர். இந்த படகில் 470 கிராம் தங்கக்கட்டி மற்றும் வலம்புரி சங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் மற்றும் வலம்புரி சங்கை தமிழகத்திற்கு கடத்த முயன்றதாக 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கத்துடன் கைது செய்யப்பட்ட 3 பேரும் புத்தளம் மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Tags:    

Similar News