தமிழ்நாடு

ஓ பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ். கையில் எடுக்க போகும் புதிய அஸ்திரம்?

Published On 2022-09-03 09:17 GMT   |   Update On 2022-09-03 09:17 GMT
  • ‘இடைத்தேர்தல்’ என்ற அஸ்திரத்தால் ஈ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி கொடுக்க முடியுமா என்ற யோசனையில் ஈடுபட்டுள்ளார்.
  • தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெல்வதே வரலாறு

சென்னை:

அ.தி.மு.க. தொண்டர்கள் யார் பக்கம்? என்று ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் மல்லு கட்டுகிறார்கள். அதே நேரம் கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தனது பலத்தை நிரூபித்து வருகிறார் ஈ.பி.எஸ்.

மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். அந்த சட்ட போராட்டம் ஒருபுறம் நடக்கட்டும். இன்னொருபுறம் அக்னி பரீட்சை ஒன்றுக்கான ஆயத்தமும் நடப்பதாக கூறப்படுகிறது. 'இடைத்தேர்தல்' என்ற அஸ்திரத்தால் ஈ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி கொடுக்க முடியுமா என்ற யோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து இடைத்தேர்தல் என்ற யுத்த களத்தை உருவாக்குவதே திட்டம்.

ஆனால் அந்த மாதிரி திடீர் யுத்தத்தை தொடங்கினால் கட்சி, சின்னம் என்ற சிக்கல் சட்ட ரீதியாக எழுந்தால் சமாளிக்க முடியுமா? என்ற சந்தேகமும் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்கள் தங்கள் கைக்குள் இருப்பதாக கூறும் ஓ.பி.எஸ். தரப்பு அதை தேர்தல் மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக உள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெல்வதே வரலாறு. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்...? என்ற தயக்கமும் இருக்கிறது.

அதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க இப்படி பிளவுபட்டு நின்றால் வெற்றி பெற முடியாது என்று உணர்த்துவதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

நெருப்பில் இறங்கியாச்சு. இனி சந்தித்தே ஆக வேண்டும் என்று துணிந்து விட்ட ஓ.பி.எஸ். அடுத்து எடுக்கப்போகும் அஸ்திரம் இதுதான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Tags:    

Similar News