தமிழ்நாடு
தூத்துக்குடியில் கனமழையால் ரெயில் நிலையம், தண்டவாளங்களில் தேங்கிய வெள்ளம்
- பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாநகரில் நேற்று முதல் பெய்த மழை காரணமாக உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரெயில்வே நிலையம் செல்லும் சாலை, ரெயில்வே தண்டவாளம், ரெயில்வே பணிமனை, வ.உ.சி.சாலை, ஜார்ஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, தமிழ்நாடு சுற்றுலா மாளிகை, சிவந்தாகுளம், லெவிஞ்சிபுரம், முத்தையாபுரம், ஸ்பிக்நகர், முள்ளக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.