தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை- கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

Published On 2022-09-15 05:31 GMT   |   Update On 2022-09-15 05:31 GMT
  • மாணவியின் தாய் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மகாவிஷ்ணு(21). கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் தென்றல் நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். அவரை ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் மாணவி மகாவிஷ்ணுவுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இருந்தபோதும் அவருக்கு தொடர்ந்து மாணவர் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News