தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரம்- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் ரத்து

Published On 2023-10-14 11:52 GMT   |   Update On 2023-10-14 11:52 GMT
  • காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு.
  • தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரியில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News