தமிழ்நாடு
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
- 2 மெயில்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- இ- மெயில் அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு மற்றும் அதிகாலை என 2 மெயில்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மேலும், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்த நிலையில், இ- மெயில் அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.