தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Published On 2022-09-29 10:07 GMT   |   Update On 2022-09-29 10:07 GMT
  • கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

சென்னை:

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிவஞானம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கற்பகம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பி.சங்கர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மீனா பிரியதர்ஷினி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செந்தில்குமார்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News