தமிழ்நாடு
மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் பயணம்
- கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
- மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர்.
சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தேடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பயணிகள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர். 5-ந்தேதி 1 லட்சத்து 72 ஆயிரத்து 609 பேரும் பயணம் செய்து உள்ளனர். கடந்த 6-ந்தேதி 2 லட்சத்து 96 ஆயிரத்து 495 பேர் அதாவது ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.