தமிழ்நாடு
குற்றாலம் மெயினருவி

கோடை வெயிலால் குற்றாலம் மெயின் அருவி வறண்டது- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2022-05-09 05:48 GMT   |   Update On 2022-05-09 05:48 GMT
பழைய குற்றாலம், ஐந்தருவியில் மிக மிக குறைவாகவே விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரையிலும் சீசன் நீடிக்கும்.

இந்த காலகட்டங்களில் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழவும், குற்றாலத்தில் நிலவும் இதமான குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

தற்போது கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவை வறண்டு விட்டன.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் பழைய குற்றாலம், ஐந்தருவியில் மிக மிக குறைவாகவே விழும் தண்ணீரில் குளித்து செல்கின்றனர். இதனால் மெயின் அருவிக்கரைகள் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் அதுவும் அக்னி நட்சத்திரம் காலத்தில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கி மழை இல்லாததால் அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.

Tags:    

Similar News