தமிழ்நாடு
பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு (வயது 51) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பரோல் முடியும்போது 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
நேற்றுடன் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு (வயது 51) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பரோல் முடியும்போது 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
நேற்றுடன் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.