தமிழ்நாடு
கைது செய்யப்பட்ட கவிதாஸ்

விழுப்புரம் அருகே தாய்-மகள் கொலை: செக்ஸ் உறவில் ஆர்வம் கொண்ட சைக்கோ- அதிர்ச்சி தகவல்கள்

Published On 2021-12-09 04:09 GMT   |   Update On 2021-12-09 04:09 GMT
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் கலித்திராம்பட்டு கண்டச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது 75).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தட்சிணாமூர்த்தி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து சரோஜா அவரது மூத்த மகள் பூங்காவனம் (55) என்பவருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சரோஜா, பூங்காவனம் ஆகிய 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதன் தாய்-மகள் 2 பேரையும் சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் சரோஜா, பூங்காவனம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு அந்த மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இது தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த போலீசாரும் குற்றவாளியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் காலனியை சேர்ந்த கவிதாஸ் (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் தாய்-மகளை அடித்து கொன்றதையும், அவர்கள் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கவிதாசை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கு குறித்து டி.ஐ.ஜி. பாண்டியன் கூறியதாவது:-

தாய்-மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கவிதாசிடம் நடத்திய விசாரணையில் பூங்காவனம் இறந்த பிறகு அவரை கவிதாஸ் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான். மேலும் கவிதாஸ் தனியாக இருக்கும் வயதான பெண்களை கொடூரமான முறையில் தாக்கி அவர்களை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிப்பதையும், அவர்கள் இறந்த பின்னரோ, மயக்க நிலையில் இருக்கும் போதோ அவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபடும் கொடூர எண்ணம் உடையவர்.

இவர் கடந்த ஜனவரி மாதம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்கள் 2 பேரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

அதேபோல் கவிதாஸ் மீது திருவெண்ணைநல்லூர், திருநாவலூர், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கற்பழிப்பு, கொள்ளை வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News