செய்திகள்
டாஸ்மாக் - வீட்டு வசதி வாரிய பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ்: அரசாணை வெளியீடு
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வீட்டு வசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் வீட்டு வசதித்துறையின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1,036 பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தமாக 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி (ஏ.ஐ.டி.யு.சி.) கூறியதாவது:-
சென்ற அரசு நிதியை காரணம் காட்டி 10 சதவீத போனஸ் வழங்கியதை இந்த அரசு பின்பற்றி தொடர்வது சரியல்ல. கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகளை திறந்து அரசின் நிதி நிலைமையை உயர்த்தியவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
எனவே அவர்கள் உழைப்பை கருத்தில் கொண்டு 10 சதவீத போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டு வசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் வீட்டு வசதித்துறையின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1,036 பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தமாக 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி (ஏ.ஐ.டி.யு.சி.) கூறியதாவது:-
சென்ற அரசு நிதியை காரணம் காட்டி 10 சதவீத போனஸ் வழங்கியதை இந்த அரசு பின்பற்றி தொடர்வது சரியல்ல. கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகளை திறந்து அரசின் நிதி நிலைமையை உயர்த்தியவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
எனவே அவர்கள் உழைப்பை கருத்தில் கொண்டு 10 சதவீத போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.