செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 91.32 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 231 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 16 ஆயிரத்து 197 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக- கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 231 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 16 ஆயிரத்து 197 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 90.17 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 91.32 அடியானது. கடந்த 12 நாட்களாக நீர்மட்டம் தினசரி 1 அடி வீதம் உயர்ந்து வருகிறது.
இனி வரும் நாட்களில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக- கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 231 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 16 ஆயிரத்து 197 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 90.17 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 91.32 அடியானது. கடந்த 12 நாட்களாக நீர்மட்டம் தினசரி 1 அடி வீதம் உயர்ந்து வருகிறது.
இனி வரும் நாட்களில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.