செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு

Published On 2021-09-22 05:31 GMT   |   Update On 2021-09-22 05:31 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,280-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு மேலேயே இருந்து வந்தது.

இதற்கிடையே சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது. இதனால் கடந்த 17-ந் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அன்று ஒருபவுன் ரூ.34 ஆயிரத்து 968-க்கு விற்றது. அதன் பின் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்தபடி இருந்தது. ஆனால் நேற்று பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.34 ஆயிரத்து 968-க்கு விற்றது.

இந்தநிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்தது. இதையடுத்து ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 410 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 10 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்கிறது.
Tags:    

Similar News