செய்திகள்
தூய்மை பணியாளருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்த விஜய் வசந்த்

தூய்மை பணியாளருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்த விஜய் வசந்த்

Published On 2021-08-07 11:33 GMT   |   Update On 2021-08-07 11:33 GMT
கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய ரெயில்வே தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது.
தமிழ்நாடு சிரிப்பு யோகா சங்கம் மற்றும் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரெயில்வே தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய ரெயில்வே தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ரெயில்வே நிலைய மேலாளர் முத்துவேல் டிப்போ அதிகாரி ஸ்ரீ ராம் குமார் சிரிப்பு யோகா சிறப்பு பிரதிநிதி கண்ணன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News