செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

Published On 2021-06-10 12:09 GMT   |   Update On 2021-06-10 12:09 GMT
தமிழக அரசு சார்பில் வாதாட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்கள் என மேலும் 44 பேரை தமிழக அரசு நியமித்துள்ளது.



சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றம் வருகிற 14-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News