செய்திகள்
கைது

திருமலையில் பக்தர்களிடம் திருடிய 3 பேர் கைது

Published On 2021-01-15 02:09 GMT   |   Update On 2021-01-15 02:09 GMT
திருமலையில் பக்தர்களிடம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:

திருமலையில் பக்தர்களிடம் பணத்தை திருடிய திருப்பதி, தாமேநெடுவை சேர்ந்த சீதாபதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஒரு பக்தரிடம் செல்போன் திருடிய தமிழக மாநிலம் மதுரையை சேர்ந்த வேலாயுதம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து 3 பேரும் திருப்பதி முனிசிபல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 3 பேரும் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News