செய்திகள்
ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை
சென்னை அடுத்த பொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை அடுத்த பொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உத்தகண்டிகை கிராமத்தில் ஒப்பந்ததாரர் முனிநாதன் வீட்டின் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளுடன் 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ.2.5 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.