செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை

Published On 2020-12-04 04:15 GMT   |   Update On 2020-12-04 04:15 GMT
சென்னை அடுத்த பொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை அடுத்த  பொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உத்தகண்டிகை கிராமத்தில் ஒப்பந்ததாரர் முனிநாதன் வீட்டின் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளுடன் 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ.2.5 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  வீட்டில் யாரும் இல்லாத போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News