செய்திகள்
ரெயில்

மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றம்

Published On 2020-11-28 02:33 GMT   |   Update On 2020-11-28 02:33 GMT
வருகிற 4-ந் தேதி முதல் மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு மதுரை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் காலை 6 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கும், கொடைரோட்டில் இருந்து நண்பகல் 11.20 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து வழக்கமாக மாலை 3.15 மணிக்கு சென்னை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

கொடைரோட்டில் இருந்து மாலை 3.30 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கும் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
Tags:    

Similar News