search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ் ரெயில்"

    • ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல கோரிக்கை.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    மேலும், வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.
    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்.16127) பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22671) பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். திருச்சி-மதுரை இடையிலான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், அன்றைய தினம் தேஜஸ் ரெயில் (எண்.22672) மாலை 5 மணி 5 நிமிடத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்று வருவது தேஜஸ் விரைவு ரெயில்
    • இந்த விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 26-ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்தார்.

    • தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிறுத்தப்படுமா? என்பதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதில் தெரிவித்தார்.
    • தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

    மதுரை

    மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது திண்டுக்கல், திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    இந்த நிலையில் தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். அதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் தேஜஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • தேஜஸ் ரெயில் ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
    • தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மக்கள் போக்குவரத்துக்கு பஸ் வசதியை விட ரெயில் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் மத்தியில் ரெயில் பயணம் மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலான தேஜஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மதுரைக்கு செல்லும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை செல்லும்.

    இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். 6.30 மணி நேரத்தில் இந்த ரெயில் இலக்கை சென்றடைவதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் ரெயில்வே வாரியம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேஜஸ் ரெயிலில் 2019 முதல் 2022 ஆண்டு ஏப்ரல் வரை (கொரோனா ஊரடங்கு காலம் தவிர) மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்பட பல கேள்விகளை கேட்டிருந்தார்.

    அதன்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த விபரத்தில் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் ரெயிலின் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 56 இடங்களும், ஏ.சி. சேர்காரில் 856 இடங்களும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 22.69 சதவீத இடங்களும், ஏ.சி. சேர்காரில் 41.86 சதவீத இடங்களும் காலியாக இயக்கப்பட்டது.

    2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 29.04 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 42.26 சதவீத இடங்களும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 50.06 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.76 இடங்களும், ஏப்ரல் மாதத்தில் 5.63 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்துள்ளன.

    அதேபோல் ஏ.சி. சேர்காரில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 35.05 சதவீத இடங்களும், டிசம்பர் மாதத்தில் 21.71 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 45.87 சதவீத இடங்களும், ஜனவரி மாதத்தில் 39.69 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.07 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்தது.

    மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு மாதம் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயிலை நிறுத்த ரெயில்வே வாரியத்துக்கு 2019-2020 காலக்கட்டங்களில் 6 முறை பரிந்துரை கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விவரம் பெற்ற பொறியாளர் தயானந்தகிருஷ்ணன் கூறும்போது, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் சொந்த ஊர் பயணத்திற்கு தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தாம்பரத்தில் தேஜஸ் ரெயில் நிறுத்துவது தொடர்பாக ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரெயில்வே வாரியம் முடிவு எடுக்கும் என்றார்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் முதல் விழுப்புரம் வரை நடைபெற்றது.
    சென்னை:

    சென்னை - மதுரை இடையே அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த ரெயிலை வருகிற 27-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்ட்ரலில் இருந்து எழும்பூர், தாம்பரம் வழியாக விழுப்புரம் வரை இயக்கப்பட்டது. 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    சோதனை ஓட்டத்தின்போது பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா? அதிர்வு இல்லாமல் ரெயில் ஓடுகிறதா? என்பது போன்ற அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ‘தேஜஸ்’ ரெயில் அதிவேக ரெயில் மட்டுமல்ல. அதி நவீன வசதிகளையும் கொண்டது. இருக்கை வசதி கொண்ட 18 ஏ.சி. பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் 78 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். 2 உயர் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பெட்டியிலும் 56 இருக்கைகள் உள்ளன.

    சர்வதேச தரத்தில் எம்.ஆர்.பி. தகடுகளால் உட்புறம் அழகிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் விமான இருக்கைகளில் உள்ளது போல் சிறிய வீடியோ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது பாடல்கள், வீடியோக்கள் பார்க்கலாம். ஜி.பி.எஸ். வசதி, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட சொகுசான வசதிகள் அனைத்தும் உள்ளன.

    இந்த ரெயில் பயணம் விமான பயணத்தைபோல் சொகுசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×