search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேஜஸ் ரெயில் நாளை திருச்சி வரை மட்டுமே செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தேஜஸ் ரெயில் நாளை திருச்சி வரை மட்டுமே செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.
    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்.16127) பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22671) பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். திருச்சி-மதுரை இடையிலான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், அன்றைய தினம் தேஜஸ் ரெயில் (எண்.22672) மாலை 5 மணி 5 நிமிடத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×