செய்திகள்
முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதிக்கு கொரோனா
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி. இவர் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் திருச்சி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி. இவர் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் திருச்சி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.