செய்திகள்
மின்னல்

வியாசர்பாடியில் மின்னல் தாக்கி வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

Published On 2020-09-25 21:41 GMT   |   Update On 2020-09-25 21:41 GMT
வியாசர்பாடியில் மின்னல் தாக்கி வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
பெரம்பூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது வியாசர்பாடி பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் உள்ள குருத்து இரண்டாக பிளந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. சில வீடுகளில் ரெகுலேட்டர் வெடித்து சிதறியது.
Tags:    

Similar News