செய்திகள்
வங்கி கணக்கு

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு- 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

Published On 2020-09-09 03:24 GMT   |   Update On 2020-09-09 03:24 GMT
தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
தேனி:

தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதற்கட்ட விசாரணையில் சுமார் 700 பேர் இதுபோன்று முறைகேடாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News