செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-15 08:18 GMT   |   Update On 2020-08-15 12:30 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 8,514 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா அறிகுறி காணப்பட்டவர்கள், ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியவர்களுடன் பழகியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா முகாம்களில் பலருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று தச்சூர், கிழக்கு ஆரணி, திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி, சேத்துப்பட்டு, புதுப்பாளையம், நாவல்பாக்கம், பெரணமல்லூர், வந்தவாசி உள்பட மாவட்டம் முழுவதும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனை மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,514 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News