செய்திகள்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-07-26 02:14 GMT   |   Update On 2020-07-26 02:51 GMT
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பேராலயம் ஆகும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அன்னையை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பிஷப் மற்றும் முக்கிய பங்குதந்தைகள் மட்டும் கலந்து கொண்டனர்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடியேற்றத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் கொடிபவனி ரத்து செய்யப்பட்டது.

பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

கொடியேற்றம், திருப்பலி சமூகவலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
Tags:    

Similar News