செய்திகள்
கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சியில் மேலும் 231 பேருக்கு கொரோனா

Published On 2020-07-09 13:44 GMT   |   Update On 2020-07-09 14:09 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,539 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,539 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News