செய்திகள்
நெல்லையில் கொரோனாவை வென்ற 84 வயது மூதாட்டி
முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை:
நெல்லை டவுனில் இருட்டுக்கடை அல்வா நிர்வாகி ஹரிசிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் சுலோசனாபாய் பிஜிலிசிங்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 84. இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் பூரண குணமடைந்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பினார். முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை டவுனில் இருட்டுக்கடை அல்வா நிர்வாகி ஹரிசிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் சுலோசனாபாய் பிஜிலிசிங்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 84. இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் பூரண குணமடைந்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பினார். முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.