செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 45 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

Published On 2020-07-04 20:05 GMT   |   Update On 2020-07-04 20:05 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் உள்பட):-

அரியலூர் - 27
செங்கல்பட்டு - 3,023
சென்னை - 24,195
கோவை - 435
கடலூர் - 357
தர்மபுரி - 62
திண்டுக்கல் - 311
ஈரோடு - 136
கள்ளக்குறிச்சி - 655
காஞ்சிபுரம் - 1,448
கன்னியாகுமரி - 329
கரூர் - 30
கிருஷ்ணகிரி - 106 
மதுரை - 2,725
நாகை - 173
நாமக்கல் - 14
நீலகிரி - 79
பெரம்பலூர் - 11
புதுக்கோட்டை - 210
ராமநாதபுரம் - 914
ராணிப்பேட்டை - 542
சேலம் - 855
சிவகங்கை - 260
தென்காசி - 200
தஞ்சாவூர் - 169
தேனி - 712
திருப்பத்தூர் - 174
திருவள்ளூர் - 1,617
திருவண்ணாமலை - 1,234
திருவாரூர் - 195
தூத்துக்குடி - 301
திருநெல்வேலி - 338
திருப்பூர் - 73
திருச்சி - 419
வேலூர் - 1,209
விழுப்புரம் - 456
விருதுநகர் - 429
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 206
உள்நாடு - 236
ரெயில் நிலைய கண்காணிப்பு - 91

மொத்தம் - 44,956

Tags:    

Similar News