செய்திகள்
கொரோனா வைரஸ்

இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கொரோனா

Published On 2020-07-02 13:13 GMT   |   Update On 2020-07-02 13:13 GMT
மதுரையில் 20 முதல் 50 வயது உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை:

மதுரையில் 20 முதல் 50 வயது உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை கொரோனா எளிதில் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதில்லை. மற்ற வயதினர் தெருக்களில் நடமாடுவது அதிகம். 20 முதல் 50 வயதிற்குள்ளோர் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கற்பனை செய்கின்றனர். கொரோனாவிடம் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இவ்வயதினர் அதிகம் பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஜூன் 29 தேதி வரையிலான பாதிப்பு பட்டியலில் மாநகராட்சியில் 1627 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172, 21 முதல் 50 வயதினர் 1017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேர் உள்ளனர். இளவயதினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் முதியவர்கள், பிறநோய் இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வயது வேறுபாடின்றி தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இளம் வயதினர் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள் என்றும் கூறினார்.

Tags:    

Similar News