செய்திகள்
கோப்பு படம்

டுவிட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ’JusticeForJeyarajAndFenix' ஹேஸ்டேக்

Published On 2020-06-26 12:10 GMT   |   Update On 2020-06-26 12:10 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ’JusticeForJeyarajAndFenix' என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை:

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக டுவிட்டரில் ’JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளவாசிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும்என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ’JusticeForJeyarajAndFenix’ ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Tags:    

Similar News