செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-06-06 03:02 GMT   |   Update On 2020-06-06 03:02 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது.
திருவாரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. 
Tags:    

Similar News