செய்திகள்
ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது- டிடிவி தினகரன்
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம் அடைந்தார். 55 வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் மாண்புமிகு. செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம் அடைந்தார். 55 வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் மாண்புமிகு. செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.