செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்- மேலும் 2 பேர் கைது

Published On 2020-02-25 05:19 GMT   |   Update On 2020-02-25 05:19 GMT
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு மது வாங்கி கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே பிளஸ் 1 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவன் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளான்.

கடந்த 22-ந்தேதி அந்த மாணவனும், மாணவியும் வேப்பனபள்ளி பஸ் நிலையம் அருகே இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அந்த மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா(26), பட்டதாரி வாலிபரான திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத்(22) ஆகியோர் குடிபோதையில் வந்தனர்.

அவர்கள் அந்த மாணவியிடம் நைசாக பேசி, குளிர்பானத்தில் மது கலந்து குடிக்க வைத்துள்ளனர். அப்போது அந்த மாணவியின் காதலனான பிளஸ்-1 மாணவன் மற்றும் அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை அங்குள்ள மறைவான பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அந்த மாணவியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிளஸ் 1 மாணவனை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் நேற்று இரவு கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News