செய்திகள்
சிறுமி நித்தியஸ்ரீ

பெரியபாளையம் அருகே வெந்நீரில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி

Published On 2020-02-17 07:11 GMT   |   Update On 2020-02-17 07:11 GMT
பெரியபாளையம் அருகே வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களது 4 வயது மகள் நித்தியஸ்ரீ.

குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க செய்வது வழக்கம். குளித்த பின்னர் தண்ணீரில் சிறிது நேரம் அமர வைத்து சிறுமிக்கு மசாஜ் செய்து விடுவார்.

வழக்கம்போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி விட்டு சமையலறைக்கு கியாசை ஆப் செய்ய சென்றார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நித்தியஸ்ரீ வெந்நீர் அண்டாவில் விழுந்தாள். இதில் அவள் அலறி துடித்தாள்.

சத்தம் கேட்டு வந்த குப்பம்மாள் வெந்நீரில் உயிருக்கு போராடிய நித்தியஸ்ரீயை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நித்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகரன், விசாரணை செய்து வருகிறார். வெந்நீரில் சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News