செய்திகள்
கைது

அன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது

Published On 2020-01-18 05:28 GMT   |   Update On 2020-01-18 05:28 GMT
கோவை மாவட்டம் அன்னூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 23). இவர் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே 13 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சிறுமி வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த் சிறுமியை அழைத்தார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பதால் சிறுமியும் அங்கு சென்றார்.

பின்னர் அரவிந்த் சிறுமியை வலுக்கட்டாயமாக அருகே உள்ள சோளக்காட்டுக்கு தூக்கி சென்றார். அவரை பின்தொடர்ந்து காளிதாஸ் என்பவரும் சென்றார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் சோளக்காட்டுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அரவிந்த் மற்றும் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அங்கு சிறுமி தனக்கு நடந்த சம்பவங்களை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியான பெற்றோர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News