செய்திகள்
மனைவியுடன் பேசியதை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் - சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
போரூர் அருகே மனைவியுடன் பேசியதை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மனைவி நர்மதா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நர்மதா, ராமாபுரம் கலசாத்தம்மன் கோவில் அருகே திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ராஜேஷ்குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜனார்த்தனன் தனது செல்போனில் இருவரையும் படம் பிடித்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தகராறில் ஈடுபட்டு ஜனார்த்தனனை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் ஜனார்த்தனன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் தாமஸன் ஜார்ஜ் விசாரணை நடத்தி, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஜனார்த்தனன் இருவர் மீதும் 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மனைவி நர்மதா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நர்மதா, ராமாபுரம் கலசாத்தம்மன் கோவில் அருகே திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ராஜேஷ்குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜனார்த்தனன் தனது செல்போனில் இருவரையும் படம் பிடித்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தகராறில் ஈடுபட்டு ஜனார்த்தனனை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் ஜனார்த்தனன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் தாமஸன் ஜார்ஜ் விசாரணை நடத்தி, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஜனார்த்தனன் இருவர் மீதும் 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.