செய்திகள்
கோப்பு படம்

தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் டிக்-டாக் செய்த வாலிபர்கள் - நூதன தண்டனை வழங்கிய போலீசார்

Published On 2020-01-08 11:39 GMT   |   Update On 2020-01-08 11:39 GMT
தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் முன் டிக்டாக் செய்த 3 வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள லெவிஞ்சிபுரம், முனியபுரம் பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு டிக்-டாக் செய்தனர். இவர்கள் 3 பேரும் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் வரும் ஒரு வசனத்தை குறிப்பிட்டு அங்கிருந்த போலீஸ் வேன் முன்பு டிக்-டாக் செய்தனர்.

பின்பு அதனை சமூக வலை தளங்களில் பரவவிட்டனர். இதனை பார்த்த தென்பாகம் போலீசார் உடனடியாக அந்த 3 வாலிபர்கள் பற்றி விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை உணர வேண்டும் என்பதற்காக, மேற்படி செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கும் மார்க்கெட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணியை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News