செய்திகள்
நாராயணசாமி

ஜனாதிபதி வருகை- அரசு அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை

Published On 2019-12-20 10:06 GMT   |   Update On 2019-12-20 10:06 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக புதுவை வருகிறார். அவர் வருகையையொட்டி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக வருகிற 23-ந் தேதி புதுவை வருகிறார்.

ஜனாதிபதி புதுவை வருகையையொட்டி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, அரசு செய லர்கள் தேவேஸ் சிங், அபூர்வா கார்க், அன்பரசு, சுர்பீர்சிங், ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அலுவால், நிகாரிகாபட், அகன்சிங்யாதவ் மற்றும் அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜனாதிபதி வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வரவேற்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News