செய்திகள்
கோப்புப்படம்

மதுரை அருகே வேனில் பயணம் செய்த சிறுமி கற்பழிப்பு- டிரைவருக்கு வலைவீச்சு

Published On 2019-12-19 04:44 GMT   |   Update On 2019-12-19 04:44 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேனில் பயணம் செய்த சிறுமியை கற்பழித்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கந்தல்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி மேலூர் தெற்கு தெருவில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார். மில்லுக்கு சொந்தமான வேனில் பணிக்கு சென்று வருவார்.

இந்த நிலையில் அந்த வேனின் டிரைவர் ராஜா அந்த சிறுமியிடம் பல மாதங்களாக தவறான கண்ணோட்டத்தில் பழகி வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வேனில் சிறுமியை அழைத்து சென்ற ராஜா அழகாபுரி பகுதியில் வேனை நிறுத்தி விட்டு சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதுதொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

வேனில் சென்ற சிறுமியை டிரைவர் கற்பழித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News