செய்திகள்
உயிரிழந்த தீபா

குழந்தை பிறந்த 2 வாரத்தில் தாய் மர்மமரணம்

Published On 2019-11-02 09:37 GMT   |   Update On 2019-11-02 09:37 GMT
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற இளம்பெண் தையல்களை பிரித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது மனைவி தீபா (28). இவர்களுக்கு தனுஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இரண்டாவதாக கருத்தரித்த தீபா கடந்த மாதம் 18-ந் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றார்.

நேற்று தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்த தையல்களை பிரிக்க தீபா சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்றவருக்கு மயக்கம் வரவே தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சையில் ஏதேனும் தவறு ஏற்பட்டு உயிரிழந்தாரா? வேறு ஏதேனும் குறைபாட்டால் ஏற்பட்ட மரணமா? என உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News