செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்- வியாபாரி கைது

Published On 2019-09-18 05:58 GMT   |   Update On 2019-09-18 05:58 GMT
புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்தனர்.

ராயபுரம்:

சென்னை தண்டையார்பேட்டை மற்றும் புது வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வீடுகளில் கஞ்சா பொட்டலங்கள் தயார் செய்து குடிசை தொழிலாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருப்புராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் புதுவண்ணாரப்பேட்டையில் குணசேகரன் என்பவர் கஞ்சாவை மொத்தமாகவும், பொட்டலங்களாகவும் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரில் கஞ்சா வாங்குவது போன்று நடித்தனர். பின்னர் குணசேகரன் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு சிறு சிறு பொட்டலங்காக கஞ்சா இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வியாபாரி குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். ரெயில் மூலமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறிய பொட்டலங்களாக தயாரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News