செய்திகள்
கொத்தடிமை முறை (மாதிரி படம்)

பூந்தமல்லி அருகே கொத்தடிமைகள் 13 பேர் மீட்பு

Published On 2019-09-11 10:34 GMT   |   Update On 2019-09-11 10:34 GMT
பூந்தமல்லி அருகே 10 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த 13 பேர் மீட்கப்பட்டனர்.
பூந்தமல்லி:

சென்னை  பூந்தமல்லியை அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் சிலர் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் ரத்னா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒருவரின் இடத்தில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கொத்தடிமைகளாக இருந்த 13 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News