செய்திகள்
விபத்து

தண்டராம்பட்டு அருகே பைக் மீது வாகனம் மோதி 3 பேர் பலி

Published On 2019-08-26 04:46 GMT   |   Update On 2019-08-26 04:46 GMT
தண்டராம்பட்டு அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூரை சேர்ந்தவர் தாகீர் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர்கள் காலித் (25). ஷாஜித் (24). இவர்கள் 3 பேரும் இரவில் திருவண்ணாமலையில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

கீழ்சிறுப்பாக்கம் என்ற இடத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பைக்கில் இருந்து தூக்கிவீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News