செய்திகள்
உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

பாதுகாப்பு பணியில் இருக்கும்போது கோவில்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

Published On 2019-08-15 05:50 GMT   |   Update On 2019-08-15 05:50 GMT
கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி, ஆக. 15-

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் இசக்கிமுத்து(வயது 55). இவர் நேற்று இரவு கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக சகபோலீசார் அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

பலியான இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருக்கு செல்வி(50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் இசக்கி முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Tags:    

Similar News