செய்திகள்
பிரம்ம கமல பூக்கள்

ஓசூரில் ஒரே நேரத்தில் 2 செடிகளில், 108 பிரம்ம கமல பூக்கள் பூத்தன

Published On 2019-08-03 05:17 GMT   |   Update On 2019-08-03 05:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரே நேரத்தில் 2 செடிகளில் பூத்த 108 பிரம்ம கமல பூக்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள மூவேந்தர் நகரில் வசித்து வருபவர் சுப்பாராவ். பல்வேறு தொழில் முகவரான இவர் தனது வீட்டில் விதவிதமான செடிகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டில் உள்ள 2 பிரம்ம கமல பூ செடிகளில், தலா 54 வீதம் மொத்தம் 108 மலர்கள் பூத்தன. பொதுவாக ஒரு செடியில் 25 முதல் 50 பிரம்ம கமல பூக்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பூக்கும், ஆனால் எங்கள் வீட்டில் தலா 54 பூக்கள் வீதம் 2 செடிகளிலும் மொத்தம் 108 மலர்கள் பூத்தன. இது மிகவும் அரிது மற்றும் அதிசயம் ஆகும் என்று சுப்பாராவ் கூறினார்.

இந்த பிரம்ம கமல பூக்களை, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வியப்புடன் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News