செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்து- சென்னை தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழில் அதிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை:
சென்னை கோசாபட்டு செல்லப்பா தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 53). தொழில் அதிபரான இவர் பணி நிமித்தமாக விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு வந்திருந்தார்.
இன்று அதிகாலை சிவகாசியில் இருந்து மதுரைக்கு அண்ணாமலை காரில் புறப்பட்டார். காரை மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (27) ஓட்டி வந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் கார் சென்டர் மீடியனை தாண்டியது. அப்போது சேலத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது.
காரில் பயணம் செய்த அண்ணாமலை, நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
வேனில் இருந்த செல்வராஜ், குமரேசன், பாரதி, சபரி, சங்கர், திருமுருகன், சதீஷ், சேகர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இவர்கள் தென்காசியில் இன்று நடக்கும் ஊரக வளர்ச்சித்துறை மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த கோர சம்பவம் நடந்தது. காயமடைந்த 13 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோசாபட்டு செல்லப்பா தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 53). தொழில் அதிபரான இவர் பணி நிமித்தமாக விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு வந்திருந்தார்.
இன்று அதிகாலை சிவகாசியில் இருந்து மதுரைக்கு அண்ணாமலை காரில் புறப்பட்டார். காரை மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (27) ஓட்டி வந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் கார் சென்டர் மீடியனை தாண்டியது. அப்போது சேலத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது.
காரில் பயணம் செய்த அண்ணாமலை, நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
வேனில் இருந்த செல்வராஜ், குமரேசன், பாரதி, சபரி, சங்கர், திருமுருகன், சதீஷ், சேகர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இவர்கள் தென்காசியில் இன்று நடக்கும் ஊரக வளர்ச்சித்துறை மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த கோர சம்பவம் நடந்தது. காயமடைந்த 13 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.