செய்திகள்

பொள்ளாச்சியில் பார் நாகராஜ் மீண்டும் கைது- புதிய வழக்கு

Published On 2019-06-07 15:45 GMT   |   Update On 2019-06-07 15:45 GMT
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள பார் நாகராஜ், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி ஜோதி நகரில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பார் நாகராஜ், கல்லூரி மாணவர்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டவர் பார் நாகராஜ். புகார் தந்த பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பார் நாகராஜ், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது அவர் அடிதடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News