செய்திகள்

எண்ணூரில் ஏ.டி.எம். பணம் ரூ. 11 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-06 09:44 GMT   |   Update On 2019-04-06 09:44 GMT
பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் எண்ணூரில் ஏ.டி.எம்.மில் செலுத்த கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவொற்றியூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். வாகனத்தில் ரூ. 11 லட்சம் பணம் இருந்தது. சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 14 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 84 லட்சம் கொண்டு செல்லப்பட்டதும், இதில் 10 ஏ.டி.எம்.மில் ரூ. 73 லட்சத்தை நிரப்பி விட்டு மீதி பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்துக்கான முறையான ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து ரூ. 11 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பொன்னேரியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News