செய்திகள்

திருமங்கலம் அருகே நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2018-11-14 11:22 GMT   |   Update On 2018-11-14 11:22 GMT
திருமங்கலம் அருகே நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்:

திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை கீரியகவுண்டன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண். திருமங்கலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரும் ஆலம்பட்டியைச் சேர்ந்த சரவணபாண்டி (21) என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டாக காதலித்து வந்தனர். சரவணபாண்டி சி.ஏ. முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த பெண் கல்லூரிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

எனவே பெண்ணின் தந்தை திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்பட்ட சரவண பாண்டியையும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரவணபாண்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

Similar News